search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காடையாம்பட்டி விபத்து"

    காடையாம்பட்டி அருகே விபத்தில் காயம் அடைந்த முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accidentcase

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அடுத்த தும்பிபாடி சாமியார்காட்டு வளவு பகுதியை சேர்ந்தவர் கோபால்(வயது 63). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாகலூர் பகுதியில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சந்தைதடம் என்ற இடத்தில் நெடுஞ்சாலையை கடந்தபோது தர்மபுரியில் இருந்து வந்த கார் அவர் மீது வேகமாக மோதியது.

    இதில் கோபால் தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×